Friday, March 13, 2009

என் அண்ணன் (சரவணன் கலியபெருமாள் ) தன் மகளுக்கு எழுதிய கவிதை....


விண்ணிலிருந்து வந்த தேவதையோ....
பார்க்கடலிலிருந்து வந்த முத்து பவழமோ...
மண்ணில் மலர்ந்த தங்க மலரோ...

ஏய் பெண்ணே..
என் உயிர் கண்ணே...
உன் முகம் பார்த்த வேளை
என் முகம் மலர்ந்ததடி...
உன் பிஞ்சு விரல்கள் தொட்ட பொழுது...
என் உயிர் ஒரு கணம் நின்றதடி..
ஈரேழு உலகம் சென்று வந்தாலும்...
உன் போல் தேவதை உண்டோ?
உன் போல் செல்வம் உண்டோ?

ஏய் பெண்ணே...
என் அருமை உயிரே...
நீ எந்தன் கைகளில் இருக்கையில்...
உன்னை கண்ணின் இமைப்போல் காப்பேன்...
உடலின் உயிர்ப்போல் காப்பேன்...

விண்ணிலிருந்து வந்த தேவதையே
பார்க் கடலிலிருந்து வந்த முத்து பவழமே
மண்ணில் மலர்ந்த தங்க மலரே

என் அருமை மகளே... நித்யா வேதா கலியபெருமாள்

அன்புடன்,
அப்பா